×

சமூக வலைத்தளங்களில் ஜாதி கலவரத்தை தூண்டும் பேச்சு

தர்மபுரி, டிச.11: தர்மபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க துணை செயலாளர் சின்னசாமி, நல்லம்பள்ளி வடகிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேஷ், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் குணசீலன், மகளிர் அணி செயலாளர் கவிதாசெல்வராஜ், தொழிற்சங்க தலைவர் கண்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் அதியமான்கோட்டை போலீசில் இன்ஸ்பெக்டர் ராஜேஷிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளங்களான வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் அம்பேத்கர் படத்தின் முன் ஒருவர் கோஷமிட மற்றவர்கள் தொடர்ந்து கோஷமிடுகின்றனர். அந்த கோஷத்தில் பெண்களை மிகவும் கேவலமாகவும், அச்சுறுத்து வகையிலும் ஜாதிகளின் பெயரை சொல்லி அமைதியான தமிழகத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக பெண் குழந்தைகளை பெற்று வளர்க்கும் பெற்றோர்களின் மனதில் அச்சுறுத்தலை ஏற்படும் விதமாக பேசுகின்றனர். பெண்களை கேவலமாக கூறும் நபரையும், அவருடன் கோஷமிடுபவர்களையும், அதை சார்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : speech ,
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...