×

குறைதீர் கூட்டத்தில் நல உதவி வழங்கல்

தர்மபுரி, டிச.11: தர்மபுரியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களிடமிருந்து  293 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 2 பேருக்கு ₹4,200 மதிப்பில் பிரெய்லி கடிகாரம், ஒருவருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை, 3 பேருக்கு ₹7,350 மதிப்பில் காதொலிக்கருவிகளும், ஒருவருக்கு ₹4,710 மதிப்பிலான இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ₹17,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலுக்கு ₹5 லட்சத்திற்கான வங்கி கடனுதவியையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, தனித்துணை ஆட்சியர் அஜய்சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : crowd ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...