தர்மபுரி, டிச.11: முன்னாள் காங்., தேசிய தலைவர் சோனியாகாந்தியின் 72வது பிறந்தநாள் விழாவையொட்டி, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாலை விநாயகர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய உறுப்பினர் சித்தையன், வக்கீல் மோகன், வட்டார தலைவர்கள் ஜனகராஜ், சண்முகம், சரவணன், பிரகாசம், காமராஜ், நிர்வாகிகள் சுபாஷ், முத்து ஆசிரியர், வேடியப்பன், லிங்கேஸ்வரி, பாபுகுமார், கௌதமன், கவிராஜ், செல்வம், வக்கீல் வெங்கடேஸ்வரா, தகடூர் வேணுகோபால், ராஜம் பஸ் உரிமையாளர் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேமுதிக மற்றும் பாமகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த வருண், கவுதம், பூபதி, ஜீவா, ஆறுமுகம் ஆகியோரை மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு வரவேற்றார். இதேபோல் அரூர், பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர் பகுதிகளிலும் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.