தர்மபுரி, டிச.11:தர்மபுரி மாவட்டம் முழுவதும், அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்களை கைது செய்யக்கோரி எஸ்பி உத்தரவிட்டதன் அடிப்படையில் போலீசார், முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அதன்படி, தர்மபுரி டவுன் பகுதியில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த பச்சியப்பன் (61) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அதியமான்கோட்டை பழனிசாமி, கற்பகம், ஞானசிவம், பட்டு, தொப்பூர் சின்னசாமி, கடத்தூர் சின்னராஜ், தயாநிதி, கம்பைநல்லூர் கலைச்செல்வி, பென்னாகரம் கிருஷ்ணன், ஏரியூர் சமாதானம், இண்டூர் ராமலிங்கம், காரிமங்கலம் கணேசன் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.