×

ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்தும் பணி வழங்கவில்லை கலெக்டர் ஆபீசில் பெண்கள் மனு

சிவகங்கை, டிச. 11: சிவகங்கை மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலக குறை தீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் புதுவாழ்வு களப்பணியாளர்களாக ஏராளமான பெண்கள் பணிபுரிந்தனர். இந்நிலையில் இப்பெண்களை நூறு நாள் வேலை திட்ட பணிகளுக்கு ஊராட்சிக்கு ஒருவர் வீதம் ஒருங்கிணைப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இவ்வாறு மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் பணி நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமன உத்தரவு வழங்கிய நிலையில் பணி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பணியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான பெண்கள் மனு அளித்தனர்.

Tags : Women ,Collector ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...