×

கஜா பாதிப்பிற்கு மாணவர்கள் நிதியுதவி

சிவகங்கை, டிச.11: சிவகங்கை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த மாணவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தனர். காமராஜர் காலனி பகுதியில் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த ராமஜெயம், சரண்யா ஆகிய இருவரிடம் இப்பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 11 மாணவர்கள் டியூசன் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக தாங்கள் சேமித்து வைத்த பணம் ரூ.4ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேலிடம் அளித்தனர்.

Tags : victims ,Ghazna ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...