×

உலக மாற்றுத்திறனாளிகள் விழாவில் விளையாட்டு போட்டி

காளையார்கோவில், டிச.11: புலியடிதம்மம் அருகில் உள்ள ஏசுவனத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா சிறப்பாக நடைபெற்றது. காளையார்கோவில் அருகில் புலியடிதம்மம் கிராம் அருகில் உள்ள ஏசுவனத்தில் புனித குவனெல்லா அன்பகம் சிறப்புப் பள்ளியில் 6ம் ஆண்டாக உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. விழாவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு 100 மீட்டர், 50மீ, ஓட்டம், தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி, பாட்டுப்போட்டி, மாறுவேட போட்டி, நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட துணை கண்காணிப்பாளர் அப்துல்கபூர், காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகுரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாட்டினை குவனெல்லா இல்லத்தின் அருட்தந்தையர்கள் குழந்தைச்சாமி, பள்ளியின் இயக்குநர் அற்புதராஜ், பொருளாளர் பவுல் பிரான்சிஸ் ஆகியோர் செய்திருந்னர்.
விழாவில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Competition ,World Disabled Festival ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி