×

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் கிராம உதவியாளர்கள் வலியுறுத்தல்

காளையார்கோவில், டிச. 11: காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கிராம உதவியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் காளையார்கோவிலில் உள்ள சமதாய கூடத்தில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது வட்டத் தலைவர் அழகர்சாமி, அரசு கிராம உதவியாளர் மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார் வட்டச் செயலாளர் கணேசன், பொருளாளர் போஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க கோரி அனைத்து தாலுகா வாரியாக மாநில சங்கத்தை வலியுறுத்துதல், அரசு ஊழியர்களுக்கு இணையான பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் பணிச்சுமையை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Village Assistants ,
× RELATED 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299...