×

மண்டபம் காந்திநகர் பகுதியில் ஆபத்தான நிழற்குடை அகற்றப்படுமா?

மண்டபம், டிச.11: மண்டபம் காந்திநகர் பகுதியில் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காந்திநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களும் கோயில்வாடி பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் என அனைவரும் காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள கான்கிரீட் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

மேலும் வெயில் மற்றும் மழை காலங்களில் மக்கள் காத்திருக்க அமைக்கப்பட்ட நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மக்கள் வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என காந்தி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mandap ,Gandhinagar ,
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...