ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம் அரண்மனை மேல வீதி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஞான வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது. மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமையில் நடந்த விழாவில் லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம், பஜனை மற்றும் சத்சங்கம் நடைபெற்றது. சுவாமி சுதபானந்தர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் தொண்டர்கள், பெண்கள், ஆன்மீகவாதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.