சிவாலயத்தில் 108 சங்காபிஷேகம்

மேலூர், டிச. 11: விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் மேலூர் அருகே சிவாலயத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள சங்கரலிங்கம், சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில் கார்த்திகை மாதம் நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கரலிங்க சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகளுடன் கூடிய ஆராதனைகளும் நடைபெற்றது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ரமேஷ் குருக்கள் மற்றும் சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: