மாநில அளவில் குத்துச்சண்டை மேலூர் பெண்கள் பள்ளி மாணவி முதலிடம்

மேலூர், டிச. 11: ஓட்டல் ஊழியரின் மகள் மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயாவில் பாரதியார் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மேலூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணி புரியும் ஆபிரகாம் மகள் ஷீபா ஹெய்ச்சல் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார். இதில் முதலிடம் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழை வென்றார். போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய ஷீபா ஹெய்ச்சலை அவர் படிக்கும் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வரவேற்றனர்.

Related Stories: