×

கொந்தளிக்கும் பொதுமக்கள் உசிலம்பட்டியில் ஆர்டிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

உசிலம்பட்டி, டிச. 11: மதுரை உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஆதிதிராவிடர்காலனி உள்ளது. இந்த காலனிக்கு மதுரை - போடி அகலரயில் பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது இதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில்பாதையை கடந்து செல்ல பாதை அமைத்துதர வேண்டும் என இந்த காலனி பொதுமக்கள் பல்வேறு புகார்மனுக்கள் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை கிராமபொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து உசிலம்பட்டி ஆர்டிஓ முருகேசன் உங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைசெய்கிறேன் என பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்பு பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்து கலைந்து சென்றனர்.

Tags : office ,RTO ,town ,Usilampatti ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...