×

சோழவந்தான் அருகே மின்நிலையம் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு

சோழவந்தான்,டிச.11: சோழவந்தான் அருகே மேலக்காலில் துணை மின்நிலையம் அமைக்கவும்,தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் கிராமமக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு மேலக்கால், வாலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துணை மின்நிலையத்திற்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மற்ற மின்நிலையங்கள் எல்லாம் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மேலக்காலில் மட்டும் இன்றுவரை பணிகள் துவங்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், துணை மின் நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வலியுறுத்தி மேலக்கால் கிராமமக்கள் நேற்று காலை முதல் இரவு வரை அனைத்து கடைகளையும் அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இக்கோரிக்கை விரைவில் நிறைவேறாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

Tags : power station ,Cholavanthan ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...