×

பாலியல் வன்முறையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச.11: பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி மதுரையில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை, பழங்காநத்தம் அருகே நடந்த இப்போராட்டத்திற்கு அருணா தலைமை வகித்தார் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுத்து நிறுத்த வேண்டும். சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள், குழந்தை பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பழ உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்திஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, பாத்திமா கல்லூரி துறைத்தலைவர் ரோஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Women ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது