செம்பட்டி, டிச. 11: நிலக்கோட்டை பேரூராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நிலக்கோட்டை பேரூராட்சியின் பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து மாவட்ட மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஏராளமான மனுக்கள் வந்தன. மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.