ஆட்டோ திருட்டு

ஒட்டன்சத்திரம், டிச. 11: ஒட்டன்சத்திரம் சொசைட்டி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2ம் தேதி இரவு, வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் அதிகாலையில் வீட்டின் வெளியில் வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த ஆட்டோவை காணாததால் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் ஆட்டோ கிடைக்காததால் ஆறுமுகம் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஆட்டோவை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: