திருப்பூர், டிச.11: திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் ஏ.பி.டி.ரோடு மாநகராட்சி கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைவிடத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஒடிசா மாநிலம் பாலசார் மாவட்டம் ஒய்டா கிராமத்தை சேர்ந்த மனோ ரஞ்சிதம் என்பவரின் மனைவி ஜெயந்தி (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் 800 ரூபாய் பறிமுதல் செய்தனர்.