×

நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

உடுமலை, டிச.11: திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா, கட்டுமான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் உடுமலை திருமூர்த்திமலையில் நேற்று முன்தினம் நடந்தது. ஐஎன்டியுசி., மணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பொன்னுசாமி, முருகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தியான அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணப்பலன் கோரும் விண்ணப்பங்களுக்கு 2 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டை பதிவு செய்யும் பணியை தொழிற்சங்கத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பின் புதிய தலைவராக சிவசாமி, செயலாளர் சுகுமார், பொருளாளராக குணசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags :
× RELATED பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை