×

பைக்குகள் மோதல்: 2 மாணவர்கள் பலி

பாலக்காடு,டிச.11:கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே ஆமையூரை சேர்ந்த உம்மர் மகன் முகமதுஆமின்(22). ஷாலிசேரியை சேர்ந்த சித்திக் மகன் ரபீஷ்(23). இவர்கள் இருவரும் கோழிக்கோடு அருகே உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று பைக்கில் இருவரும் பாலக்காடு வந்து கொண்டிருந்தனர். ஆலாம்வயல் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்களது பைக் மீது மோதியது. இதில் முகமது ஆமின்,ரபீஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரும் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொரு பைக்கில் வந்த அப்பாஸ், மற்றும் ஷா ஆகிய இருவரும்  படுகாயம் அடைந்து பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கோழிக்கோடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bikes conflict ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்