×

அதிமுக., அரசை கண்டித்து திமுக தெருமுனை பிரசாரம்

சோமனூர், டிச.11: அதிமுக., அரசின் அராஜக போக்கை கண்டித்து  சோமனூரில் திமுக சார்பில் தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. இதில் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.  திமுக நகர செயலாளர் தங்கவேல், கருமத்தம்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் நித்தியா மனோகரன், அரசூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசு, சோமனூர் அவைத்தலைவர் கங்காதர மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தெருமுனை பிரசார துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில், சோமனூர் பகுதி திமுக நிர்வாகிகள் ஜாஸ்மின் அப்பாஸ், அருணகிரி, நாகராஜ், சக்திவேல், ரமேஷ், பிரசாந்த்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,protest ,government ,DMK Street ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...