×

குறைதீர்க்கும் கூட்டத்தில் 254 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, டிச. 11: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 254 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 254 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தனித்துணை ஆட்சியர் பிரபாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்