×

ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பு நன்றி

காஞ்சிபுரம், டிச.11:  தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் நல சங்கம் சார்பில் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது  தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை ஏற்கப்பட்டு  ₹7 ஆயிரம் ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு  ஊராட்சி செயலாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசுதேவன், ஊரக கூட்டமைப்புத் தலைவர் திருப்பூர் ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை சங்க துணை செயலாளர் நாகை சவுந்திரபாண்டியன், மாநில துணைத்தலைவர் திருவாரூர் புஷ்பநாதன், தமிழ்நாடு ஓவர்சீஸ் சங்க மாநிலத் தலைவர் நடராஜன் ஆகியோர் சென்னை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, திட்ட அலுவலர் ஜெயக்குமார் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள தங்களின் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருமாறும் அப்போது வேண்டுகோள் விடுத்தனர்.

Tags : Federation ,Panchayat Secretaries ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்