×

பாமக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, டிச.11:   காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமிழி ஊராட்சி, மேட்டுப்பாளையம் நீர் தேக்க தாங்கலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருக்கும் வருவாய்துறை அதிகாரிகளை கண்டித்தும் காஞ்சி. மத்திய மாவட்ட பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு பாமக நிர்வாகி ஒண்டி வீரன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில், பாமக மாநில துணை பொதுசெயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்