வைகுண்டம், டிச.11: ஆழ்வார்திருநகரியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா நடந்தது. நகர காங்கிரஸ் தலைவர் இளங்கோநயினார் தலைமை வகித்தார். அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸின் தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் காடுவெட்டி பிச்சையா, வை கிழக்கு வட்டார தலைவர் சுயம்புலிங்கம், முன்னாள் ஆழ்வை வட்டார தலைவர் சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பாஸ்மரைக்காயர் வரவேற்றார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., ராணிவெங்கடேஷன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கும், ஆழ்வை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில், மாவட்ட துணைத்தலைவர் ஜோசப்ஜெயசீலன், சாயர்புரம் நகர தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் கோதைநாயகி, முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் ரத்தினம், நிர்வாகிகள் தமிழ்செல்வன், சுந்தரபாண்டியன், நயினார்பாண்டியன், அந்தோணி, காந்திமதி, சரோஜினி, மங்கலசெல்வி, பத்திரகாளி, அன்னகளஞ்சியம், சின்னதம்பி, சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.