கோவில்பட்டி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கோவில்பட்டி, டிச.11: கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை வரவேற்கும் விதமாக கிறிஸ்து பிறப்பு பாடல் ஆராதனை நடந்தது. கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை வரவேற்கும் விதமாக கிறிஸ்து பிறப்பு பாடல் ஆராதனை நடந்தது. பள்ளி முதல்வர் அருட்சகோதரி தயா வரவேற்றார். தாளாளர் புஷ்பா முன்னிலை வகித்தார். கோவில்பட்டி புனித வளனார் ஆலய உதவி பங்குத்தந்தை அருள் அந்தோணி மைக்கேல், லூயிஸ் இன்பராஜ், ஷீலா மற்றும் ஆர்.சி.பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அலெக்ஸ்சான், ராஜேஸ்வரி, அந்தோணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றி பள்ளி குழுந்தைகளின் ஆடல், பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிறிஸ்தவ பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: