×

கருவந்தாவில் தூய பாத்திமா அன்னை கெபி திறப்பு விழா

நெல்லை, டிச. 11:  ஊத்துமலை பங்கு  கருவந்தாவில் தூய சவேரியார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்ட தூய பாத்திமா அன்னை கெபியை பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் திறந்து வைத்து அர்ச்சித்தார். பெங்களூர் ஜெபமாலை மாதா துறவர சபை பங்குத்தந்தை லாரன்ஸ் திருவிளக்கேற்றினார். இதையொட்டி 8ம் தேதி இரவு 7.30 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. விழாவில் ஊத்துமலை பங்குத்தந்தை அருள்அந்தோணி, அருட்சகோதரிகள், கருவந்தா பகுதி நாட்டாண்மை, பொறுப்பாளர்கள், உபதேசியார், கிறிஸ்தவ மக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Kubi ,Karuvandha ,Fatima ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...