×

ராதாபுரம் கடைமடை குளங்களுக்கு தண்ணீர்

நெல்லை, டிச. 11:  மணிமுத்தாறு தண்ணீரை ராதாபுரம் கடைமடை குளங்களுக்கு தரக்கோரி கலெக்டரிடம் இன்பத்துரை எம்எல்ஏ, பாசன விவசாயிகளுடன் சந்தித்து மனு அளித்தார். மனு விவரம்: மணிமுத்தாறு அணை திறக்கப்பட உள்ள நிலையில், இம்முறை 3, 4 ரீச்களுக்கு தண்ணீர் அளிக்கப்பட உள்ளது. 4வது ரீச்சில் கடைமடையில் உள்ள ராதாபுரம் சுவிசேஷபுரம் குளம் வரை தண்ணீர் வருவது சிரமம். ராதாபுரம் பகுதிகளில் கடற்பரப்பு காரணமாக நிலத்தடி நீர் உப்பாக உள்ளது. மழை பெய்யாத காரணத்தால் மணிமுத்தாறு தண்ணீரை கடைமடை குளங்கள் வரை அனுப்ப வேண்டும். 4வது ரீச்சில் இடையன்குளம் வரை தண்ணீரை நீட்டித்து தர வேண்டும். அப்போதுதான் ராதாபுரம் வட்டார விவசாயிகள் பயன்பெறுவர். இப்போது அப்பகுதியில் 12 குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜா, இலக்கிய அணி ரமேஷ், சரவணகுமார், முருகேசன், கல்யாண சுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது