×

கட்டிட தொழிலாளி மாயம்

களக்காடு, டிச. 11:   களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் தச்சன்குளத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (35). கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த 3ம் தேதி வேலைக்கு செல்வதாகக்கூறி வீட்டை விட்டு சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சொக்கலிங்கம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி குறித்த புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி