×

திருவண்ணாமலையில் பெண்ணை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலையில் பெண்ணை தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கோணகுப்பத்தாள்(60). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜூ, தவக்குமார். சகோதரர்களான இவர்களுக்கும், கோணகுப்பத்தாளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 29ம்தேதி கோணகுப்பத்தாள் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜூ, தவக்குமார் ஆகிய இருவரும் கோணகுப்பத்தாவிடம் தகராறு செய்து, ஆபாசமாக திட்டியுள்ளனர். இதை கோணகுப்பத்தாளின் மகள் சோனியா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் இருவரும் சோனியாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கோணகுப்பத்தாள் புகார் செய்தார். அதன்பேரில் சகோதரர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : brothers ,Thiruvannamalai ,
× RELATED அவமானங்கள்தான் தலைநிமிர வைத்துள்ளது!