×

முத்துப்பேட்டை அரசு பள்ளியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சோலார் விளக்குகள் விநியோகம்

முத்துப்பேட்டை, டிச.7:  முத்துப்பேட்டை அரசு பள்ளி 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சோலார் விளக்கு வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புக்கு பிறகு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சில இடங்களுக்கு மட்டும் இரவில் மின்சாரம் வழங்கி வரும் நிலையில், சில இடங்களில் இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் படிக்க போதிய வசதியின்றி பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை எதிர்நோக்கி படித்து வரும் நிலையில், மாணவர்களின் தேர்வுக்கான படிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு படிக்க உதவியாக முஸ்லிம் அமைப்பு ஒன்று இலவசமாக சோலார் விளக்கு முடிவு செய்து, நேற்று முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சோலார் விளக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்றார். இதில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் சார்பில் மாணவர்களுக்கு சோலார் விளக்கு வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சோலார் விளக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார். டவுன் லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர்கள் சிங்காரம், நாராயணமூர்த்தி, பொறியாளர் செல்வகணபதி முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன் பள்ளி மாணவர்களுக்கு சோலார் விளக்குகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Muthupethe Government School ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...