×

கோட்டூர் அருகே வாய்க்காலில் சடலமாக மிதந்தவர் மாஜி ஊராட்சி மன்ற தலைவர் போலீசார் விசாரணையில் தெரிந்தது

மன்னார்குடி, டிச. 7:கோட்டூர் அருகே வாய்க்காலில் சடலமாக மிதந்தவர் மாஜி ஊராட்சி மன்ற தலைவர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
திருவாரூர் மாவட்டம்  கோட்டூர்  ஒன்றியம் சித்தமல்லி ஜீவா தெரு மஞ்சக் கன்னி வாய்க்கால் உள்ளது. இவ்வாய்க்காலில் தற்போது அதிகளவில் தண்ணீர் செல்கிறது. வாய்க்காலில் உள்ள சிறுபுதர் ஒன்றில் சிக்கி  சுமார்  60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்  பிணமாக மிதந்தார். சடலமாக கிடந்தவரின் உடல் அழுகியிருந்த காரணத்தினால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபற்றி அப்பகுதி விஏஓ ஞானசேகரன் பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் கொடுத்தார்.

விசாரணையில், வாய்க்காலில் இறந்து கிடந்தவர் பெருகவாழ்ந்தான் அடுத்த செருகளத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மகாலிங்கம் (65) என்பது தெரிய வந்தது. மேலும் மகாலிங்கம் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் இவருக்கு லட்சுமி, குப்பம்மாள் என 2 மனைவிகள், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகாலிங்கத்தின் உடல் மிகவும்  அழுகி இருந்ததால் சம்பவ இடத்திலேயே போலீசார் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : panchayat leader head ,Kodur ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...