அரியலூர்,டிச.7: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் தலைமையிலன போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(50) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சின்னதுரையை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.