×

தந்தை திட்டியதால் ஐடிஐ மாணவர் தற்கொலை

அரியலூர்,டிச.7: அரியலுார் அருகே தந்தை திட்டியதால் ஐடிஐ மாணவன் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் கீழ தெருவை சேர்ந்தவர் கதிரேசன் மகன் கனகராஜ்(23). ஐடிஐ வரை படித்துள்ள இவருக்கு, அவரது தந்தை சில தினங் களுக்கு முன் புது பைக் வாங்கி கொடுத்துள்ளார்.

கடந்த 2நாட்களுக்கு முன்பு கனகராஜ் புதுபைக்கை ஓட்டி செல்லும் போது தவறி கீழே விழுந்து பைக் சேதமடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கதிரேசன், கனகராஜை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கனகராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து மயக்கம் மடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற கனகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ITI ,murder ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...