×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர்,டிச.7:  அரியலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாணவ, மாணவியர்களின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் விஜயலட்சுமி   கொடியசைத்து துவக்கி வைத்து, துணிப்பைகளை மாணவிகளுக்கு வழங்கினார். பாக்கு மட்டை தட்டுகள், இலைகள், இலைகளால் பிண்ணப்பட்ட கிண்ணங்கள், சணல் பைகள், துணிப்பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையம், தேரடி, சத்திரம் வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதன், நகராட்சி ஆணையர் திருநாவுக் கரசு, உதவிப்பொறியாளர்கள் , ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...