×

மீன்சுருட்டி பெண்கள் பள்ளியில் காரைக்கால் வானொலி சார்பில் ஊரும் உறவும் கலந்துரையாடல்

ஜெயங்கொண்டம், டிச. 7: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காரைக்கால் வானொலி நிலையம் சார்பில் ஊரும் உறவும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை காரைக்கால் வானொலி அறிவிப்பாளர் கலியபெருமாள் ஒருங்கிணைத்து வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஊரும்,உறவும் என்ற தலைப்பில் பேசினார்.

மாணவிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி மரணத்துக்கு தள்ளப்படுவதை தடுப்பது குறித்தும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்தும் ஆசிரியர்களும், மாணவிகளும் பேசினர். இந்நிகழ்ச்சி காரைக்கால் வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேயர்மன்ற தலைவர் ராஜாபெரியசாமி செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் உஷாராணி, பெரியசாமி, அருண்தேவன், வண்டார்குழலி, சபிதா மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Karaikal Radio ,Fishstuff Girls School ,
× RELATED காரைக்கால் வானொலியில் இந்தி திணிப்பு ரத்து: ராமதாஸ் வரவேற்பு