×

மேச்சேரி விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப பயிற்சி

மேச்சேரி, டிச.7: மேச்சேரி அருகே சின்னசாத்தப்பாடி பகுதி விவசாயிகளுக்கு, பயிர் பாதுகாப்பு மற்றும் மருந்துகளை பாதுகாப்பாக கையாளும் தொழில்நுட்ப பயிற்சி, வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா தலைமையில் நடந்தது. வேளாண்மை அலுவலர் பாலுமகேந்திரன் பேசுகையில், ‘விவசாயிகள் அங்கீகாரம் பெற்ற பூச்சி மருந்து விற்பனையாளர்களிடம் மருந்து வாங்க வேண்டும். மேலும், அதற்குண்டான ரசீது பெறவேண்டும். வயல்களில் தெளிக்க பூச்சி கொல்லி மருந்தை கலக்கும் போது, கைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும்,’ என்றார். இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், உதவி மேலாளர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : crop protection technicians ,Mettur ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது