×

பாரூர் அருகே காதல் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

போச்சம்பள்ளி, டிச.7: பாரூர் அருகே காதல் மனைவியை காணவில்லை என கணவர் தெரிவித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாரூர் அருகே மேல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(22). வெல்டிங் தொழிலாளியான இவரும், மாலதி(20) என்பவரும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 24ம் தேதி வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற மாலதி, அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து கணவர் தங்கராஜ் பாரூர்போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Parur ,
× RELATED கடைகளில் குட்கா விற்ற 24 பேர் கைது