×

சினிமா காமெடி பாணியில் “புறாவை காணோம்” என போலீசில் புகார்

போச்சம்பள்ளி, டிச.7:  போச்சம்பள்ளி ரோடூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சம்பத்குமார். இவர், கால்நடைகளையும், புறா உள்ளிட்ட பறவைகளையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் புறாக்களை கூண்டுகளில் அடைத்ததும், சம்பத்குமார் தூங்கச் சென்றார். நேற்று காலை எழுந்ததும் புறாக்களுக்கு தீவனம் போடுவதற்காக கூண்டு பக்கமாக சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு கூண்டு திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். 50க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வந்த நிலையில், ஒரு சில புறாக்கள் மட்டும் அங்கிருந்தை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.நள்ளிரவில் வந்த மர்ம ஆசாமிகள், பூட்டை உடைத்து கூண்டுக்குள் இருந்த புறாக்களை பிடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் சம்பத்குமார் புகார் தெரிவித்தார். அதில், மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற ₹25 ஆயிரம் மதிப்பிலான புறாக்களை மீட்டுத்தருமாறு கூறியுள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். திரைப்படம் ஒன்றில், கிணற்றை காணோம் என போலீசில் புகார் கூறி வடிவேலு சிரிப்பலையை ஏற்படுத்துவார். அதேபோல், புறாவை காணோம் என விவசாயி புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது