×

தாலுகா வாரியாக ரேஷன்கடை நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்

தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டத்தில் தாலுகா வாரியாக ரேஷன்கடை நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.  இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:  தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதிபடுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் தாலுகா அளவிலான குறைதீர்க்கும் முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் நாளை (8ம் தேதி) காலை 10மணிக்கு அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது.

தர்மபுரி தாலுகாவில் அளே தர்மபுரியிலும், பென்னாகரம் தாலுகாவில் வத்திமரத்து அள்ளியிலும், பாலக்கோடு தாலுகாவில் பெல்லாரஅள்ளி பகுதியிலும், அரூர் தாலுகாவில் மோபிரிபட்டியிலும் நடக்கிறது.  அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் அம்மானிகோம்பை பகுதியிலும், நல்லம்பள்ளி தாலுகாவில் அனுமந்தபுரத்திலும், காரிமங்கலம் தாலுகாவில் கம்பைநல்லூர் மரியம்பட்டியிலும் உள்ள ரேஷன் கடைகளில் குறைதீர்க்கும் முகாம்கள் நடக்க உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பொது விநியோக திட்டம் தொடர்பான குறைகளை மனுக்களாக தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rakeshanka Consumer Disposal Camp ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா