×

தவி இயக்குநர் எச்சரிக்கை காயம்பட்டவரை காப்பாற்ற வந்த ஆம்புலன்ஸ் டிரைவர், நர்சுக்கு சரமாரி அடி

திருச்சுழி, டிச.7: திருச்சுழி அருகே தம்மநாயக்கன்பட்டியில் நேற்று முன்தினம் மாலை தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சாலையோரம் ஒருவர் கிடப்பதாக, ரெட்டியபட்டி பகுதி ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன்குமாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் நவீன்குமார் மற்றும் செவிலியர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு  விரைந்தனர். ரெட்டியபட்டியை அடுத்த தம்மநாயக்கன்பட்டி விலக்கில் சாலையோரமாக தலையில் அடிபட்ட நிலையில் ஒருவர் கிடந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். காயமடைந்தவர் மதுபோதையில் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த ரஞ்சித்குமார், துரைப்பாண்டி ஆகியோர் ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன்குமார் மற்றும் செவிலியர் மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நேற்று ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags :
× RELATED பணம் திருடியவர் கைது