×

பூத்து குலுங்கும் தேக்கு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவில்லிபுத்தூர், டிச.7: திருவில்லிபுத்தூர் மம்சாபுரம் சாலையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளின் படைப்புகளை கொண்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார். கண்காட்சியை ராமர் (துளிர்) திறந்து வைத்தார். முதல்வர் கமலா வரவேற்றார். துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அழகர்சாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர். இதேபோல் பள்ளியில் கை கழுவும் தினம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு கைகழுவுதலின் அவசியம் குறித்தும்,  ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

Tags : Science Exhibition ,School of Flowers ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி