×

திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது

திருச்சுழி, டிச.7:  திருச்சுழி அருகே காட்டு பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. சில வாரங்களுக்கு முன் இரவு கடையை பூட்டிவிட்டு விற்பனையான ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துடன் டூவீலரில் ஊழியர்கள் முத்துக்கருப்பன், மாரியப்பன் ஆகியோர் புறப்பட்டனர். திருச்சுழி குண்டாற்று பாலம் அருகே இருட்டில் மறைந்திருந்த மர்மநபர்கள் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தேகத்திற்குரிய மூவரை அழைத்து  விசாரித்தனர். அப்போது திருச்சுழியை சேர்ந்த சக்திவேல், பச்சேரியை சேர்ந்த சதீஷ் மற்றும் கோரைக்குளத்தை முத்துச்சாமி ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மூவரையும் திருச்சுழி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் குற்றவாளிகள் அளித்த தகவலின்பேரில் வழிப்பறி சம்பவத்தில்  ஈடுபட்ட மேலும் மூவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...