×

ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகாசி, டிச.7: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். மசூதியை அதே இடத்திலேயே கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மதார்கான் தலைமை வகித்தார். மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் அப்துல்அஜீஸ் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ அஸ்லம்பாஷா, மாவட்ட அரசு தலைமை தலைமை ஹாஜி ஷாநாஸ்கான், திமுக வனராஜா, மார்க்சிஸ்ட் அர்ச்சுணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம்ஷா, இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஜஹாங்கீர், திராவிட கழகம் வானவில் மணி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  வர்த்தக அணி செயலாளர் அப்துல்ஹக்கீம் நன்றி கூறினார். விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முகமது ஷாஜஹான்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஷேக் முகமது, மாவட்ட பொருளாளர் முகமது தாஹா, மாவட்ட தலைவர் ஹக்கிம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக் குழு சீனிவாசன், நகரச் செயலாளர் காதர் மைதீன், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் செய்யது முகமது உஸ்மானி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Tags : Demonstration ,organizations ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!