×

மயிலாடும்பாறை அருகே கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது மதுரை சிறையில் அடைப்பு

வருசநாடு, டிச. 7:  மயிலாடும்பாறை அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். மயிலாடும்பாறை அருகே மூலக்கடை கிராமத்தை சேர்ந்தவர் லோகு(55). இவர்  கடந்த ஏப்ரல் மாதம் இரவில் வீட்டு வாசலில் வெட்டுக் கத்தியால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குற்றவாளி யார் என தெரியவில்லை. இதனை கண்டுபிடிப்பதற்கு கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் நேற்று மூலக்கடை கிராமத்தைச் சேர்ந்த மொக்கப்பன் மகன் ராஜ்குமார்(33) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமார் மற்றும் கொலை செய்யப்பட்ட லோகு இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரம் செய்ததில் முன்விரோதம் இருந்துவந்ததாக தெரிகிறது. இதனால் லோகுவை, அவரது வீட்டின் முன்பு படுத்திருந்தபோது ராஜ்குமார் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டேன் என என காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்பு கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜ்குமாரை கடமலைக்குண்டு காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Mayiladaraiyar ,jail ,Madurai ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!