×

மகன் சாவில் மர்மம் தந்தை புகாரின் பேரில் பிணம் தோண்டி எடுப்பு கம்பத்தில் பரபரப்பு

கம்பம், டிச. 7: தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி இறந்தவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியை சேரந்த தர்மர் மகன் ஈஸ்வரன்(27). இவருக்கும் கலைவாணி(25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி ஈஸ்வரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாக கலைவாணி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். உறவினர்களும் வந்து ஈஸ்வரன் உடலை இறுதிச்சடக்கு செய்து அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் கலைவாணியின் நடத்தையில் ஈஸ்வரனின் தந்தை அழகருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உத்தமபாயைம டிஎஸ்பியிடம் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது. அதனால் தனது மருமகளிடம் விசாரிக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இதனடிப்படையில் புகாரை ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்க டிஎஸ்பி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் தேனி மருத்துவ கல்லூரி டாக்டர் அருண்குமார் தலைமையில், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி முன்னிலையில் இறந்த ஈஸ்வரன் உடலை ேதாண்டி எடுத்து பிரேத பரிசோதனை   செய்யப்பட்டு மீண்டும் புதைத்தனர்.

மேலும் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்கு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பம் வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : mystery father ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?