×

நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி, டிச.7:  தேனி மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்கள் நாளை நடக்க உள்ளது.  தேனி மாவட்ட வழங்கல் துறை சார்பில் தேனி மாவட்டத்தில் நாளை(8ம் தேதி) அனைத்து தாலுகாக்களிலும் உணவு பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஆண்டிபட்டி தாலுகாவிற்கான கூட்டம் சிறப்பாறையிலும், போடி தாலுகாவிற்கான கூட்டம் பெருமாள்கவுண்டன்பட்டியிலும், பெரியகுளம் தாலுகாவிற்கான கூட்டம் குள்ளப்புரத்திலும், தேனி தாலுகாவிற்கான கூட்டம் தர்மாபுரியிலும், உத்தமபாளையம் தாலுகாவிற்கான கூட்டம் பொட்டிபுரத்திலும் நடக்க உள்ளது.

இக்குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேசன் கடைகள் சம்பந்தமான குறைகள் குறித்தும், குடும்ப அட்டைகளில் பெயர்சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் மனு அளிக்கலாம்.  பொதுமக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சர்பதிவாளர் மற்றும் நியாய விலைக்கடை நடத்தும் நிறுவன அலுவலர்களுக்கு மனு மூலமும் தெரிவிக்கலாம். முன்கூட்டியே பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முகாம் நடக்கும் நாளாள நாளை கூட்டத்திலேயே தீர்வு அளிக்கப்படும்.

Tags : Consumer Slow Meeting ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...