கரூர், டிச.7: கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் சுகாதார வளாக கட்டிடத்தை தொடர்ந்து பராமரிப்பு செய்யவில்லை. இதனால் பொது சுகாதார வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்தில் தேர்தல் நடைபெறாததால் மக்கள் பிரதிநிதிகளும் இல்லை. இதனால் அதிகாரிகளிடம் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் உள்ளாட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சிரமத்தை கருத்தில் கொண்டு கழிப்பிட கட்டிடத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.