×

கடன் தொல்லை 4 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

திருச்சி, டிச. 7: திருச்சி கே.கே.நகர் களத்துவீட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (35). கார் டிரைவர். இவரது மனைவி வெள்ளையம்மாள் (30). இவர்களுக்கு 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 4 வயதில் மித்ரா என்ற மகள் உள்ளார். முருகானந்தம் கார் ஓட்டி சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு குடும்பம் நடத்த முடியாதநிலையில் அக்கம்பக்கம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து கடனை கேட்டு தொந்தரவு கொடுத்ததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 4ம் தேதி கோவைக்கு சவாரிக்காக முருகானந்தம் சென்றுவிட்டார்.

 இந்நிலையில் கடன் கொடுத்தவர்களில் சிலர் வீட்டிற்கு வந்து வெள்ளையம்மாளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மனவேதனை அடைந்த வெள்ளையம்மாள் விஷம் வாங்கி குடித்து, மகளுக்கும் கொடுத்தார். இதில் இருவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கினர். அப்போது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது வெள்ளையம்மாளும், 4 வயது மகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை பார்த்து இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் வெள்ளையம்மாள் இறந்தார். குழந்தை மித்ராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை