பிளாட்பாரத்தில் தூங்கிய 3 மாத ஆண் குழந்தை கடத்தல்

திருச்சி, டிச. 7: ரங்கத்தை சேர்ந்தவர் மாணிக்கம். கூலித்தொழிலாளி. சொந்தமாக வீடு இல்லாததால் பிளாட்பாரங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு பெரியார் பாலம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் 3 வயது ஆண் குழந்தையுடன் தூங்கியுள்ளார். நள்ளிரவு எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த குழந்தையை காணாததால் திடுக்கிட்டு அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் குழந்தையை காணவில்லை. இதுகுறித்து ரங்கம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: